Wednesday 21 September 2011

வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது: அறிவியல் விளக்கம்


வானம் ஏன் நீல நிறமாக தெரிகின்றது: அறிவியல் விளக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 01:58.56 பி.ப GMT ]
வானம் ஏன் நீல நிறமாக தோன்றுகிறது என்ற கேள்வி பலரின் மனதில் தோன்றியிருக்கலாம்.
ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் எழும் போது தான் மனித அறிவும் மூட நம்பிக்கைகள் பலவற்றிலிருந்தும் விடுபடும்.
பல அடிப்படை கேள்விகள் மனித மனங்களுக்குள் இருந்து வருவதே இல்லை. அவற்றில் ஒன்று தான் இது.
பொதுவாக சூரியனில் இருக்கும் நிறமானது பல நிறங்களை உள்ளடக்கியது. இதனை வானவில்லில் அவதானிக்கலாம். வாயுமண்டலத்தில்(ATMOSPHERE) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென், 21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு.
அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது. ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை. சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது.
கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் பூமியை வந்தடைகின்றன. குறுகிய அலைநீளம் உடைய துணிக்கைகள் நிறத்தை உருவாக்குகின்றன. அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது.
இவைகள் காற்றிலுள்ள ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது.(சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது)
நாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன. அதனாலேயே பகலில் வெறுமனே வாயுத்துணிக்கைகள், மாசுக்களால் மேலே கூறப்பட்ட ஒளியால் ஆனதே தவிர அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை.
பௌதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமாக இருந்தால் அவை நம் பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும். வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது.
காலை மாலை சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் போது மட்டும் சிவப்பாக தெரிகிறது. அதற்கு காரணம் சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகள் மின்குமிழில் இருந்து வரும் வெள்ளை, நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது.
உறிஞ்சிய அணு மண்டலத்தில் மூலக்கூறுகள் இடையூறில்லாமல் நீர்த்துளிகள் மற்றும் பனிமூட்டம் போன்றவற்றின் மீது பயணம் செய்வதால் வானம் நீலநிறமாக இருப்பது போல தோன்றுகிறது.
வானம் என்பதில் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் அப்போது மட்டும் குறைவாக தெரிகிறது. வானவில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிக துடிப்புடனும் சிவப்பு நிறம் மிகக் குறைந்த துடிப்புடனும் இருக்கிறது.
நாம் பார்ப்பது என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும் போது மட்டுமே. பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் போது ஒளி நமது கண்ணை வந்தடைவதால் தான் காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறம் மற்ற நிறங்களை விட பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறமாக தெரிகிறது.
இரவில் நிலவின் ஒளி, நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

No comments:

Post a Comment